கோச்சடை வள்ளல் தெய்வத்திரு முத்து தேவர் அவர்கள் 1955-ல் நிறுவிய இப்பள்ளி இன்று முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. மாநில அளவில் தரம் மற்றும் 100 சதவீத தேர்ச்சி போன்ற சிறப்புகளுடன், கல்வி தந்தை முத்து தேவரின் தீர்க்க தரிசனத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இன்று அவர் வழித்தோன்றல்களான திரு. K. சரவணன் தலைவராகவும். திரு R. கண்ணன் அவர்கள் செயலாளராகவும். முனைவர் திரு P. நடன குருநாதன் அவர்கள் இயக்குனராகவும் இப்பள்ளியை திறம்பட நடத்தி வருகின்றனர். அப்பெருமானின் வழியில் நின்று திரு கண்ணன் ஸ்ரீ சாதனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளி, ஆகிய பள்ளியை நிறுவி மதுரை நகரின் கல்வி வரைபடத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளார்.
மதுரை வட்டார பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட முத்து தேவர் திருப்பரங்குன்றத்தில், முத்துத்தேவர் முக்குலத்தோர் இடை நிலைப் பள்ளியை நிறுவினார். கல்வி ஒன்றே சமுதாய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழி என்று நம்பினார். ‘பள்ளிக்கூடதார்’ என்று ஊர் மக்களால் உரிமையுடன் அழைக்கப்பட்டார். அன்று தொட்டு இன்றுவரை முத்து தேவர் வம்சம் பள்ளிக்கூடத்தார் வம்சம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. தனது வம்சத்திற்கு பள்ளிக்கூடத்தார் வம்சம் என பெயர் விளங்க காரணமாக இருந்தார்.